9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு! - Seithipunal
Seithipunal


வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்தது. 

இதனால் தமிழகத்தில் வட மாவட்டங்களில் நேற்று காலை ஒரு சில இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்தது. குறைந்த காற்றழுத்தம் அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. 

இது புயல் சின்னமாக மாறுவதால் தமிழகத்தில் அடுத்து 2 நாட்களுக்கு மழை நீட்டிக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகள் உள்ள 9 துறைமுகங்களில் ஒன்றாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் உள்பட 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu Storm warning cage boom in 9 ports!


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->