நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
Tamilnadu rain update 02012024
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக இன்று, நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பணிமன்றத்திற்கு வாய்ப்பு உள்ளது. 4.1.2024 மற்றும் 5.1.2024 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 23-24 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
English Summary
Tamilnadu rain update 02012024