தமிழ் நாட்டில் உள்ள 393 அம்மா உணவகங்களில் ஆய்வு!
tamilnadu 393 ammaunavagam decided
சென்னை மாநகராட்சி மண்டல உறுப்பினர்கள் மூலம் பழுதடைந்த அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து 2 வாரங்களில் அனைத்தையும் மற்ற முடிவு:
சென்னை மாநகராட்சி மூலம் தற்போது 393 அம்மா உணவகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவை தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருவதால் அங்குள்ள கிரைண்டர், மிக்சி, பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் பழுதடைந்தும் உடைந்தும் உள்ளன.
மேலும் அங்கு தினமும் 3 வேளையும் உணவு தயாரிப்பதால் அதற்கான தேவையான உபகாரணகள் இல்லாமல் அங்குள்ள ஊழியர்கள் பெரிது சிரமமடைகின்றனர். இதனால் உணவு தயாரிப்பதில் தாமதமும் ஏற்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி மண்டல தலைவர், சுகாதார அதிகாரிகள், உதவி பொறியாளர்கள் கொண்ட குழுவை அமைத்து, அம்மா உணவகங்களை பார்வையிட்டு அதில் எந்தெந்த பொருட்கள் பயன்படுத்த முடியும், எந்த பொருட்கள் பயன்படுத்த முடியாது என கண்டறிய நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் சென்று ஆய்வு செய்து 2 வாரத்தில் புதிய பொருட்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல பழுதடைந்த அம்மா உணவாக கட்டிடங்களில் கூரை ஒழுகுகிறதா? பொதுமக்கள் சாப்பிட முடியாமல் பாதிப்பு உள்ளதா? என ஆய்வு செய்து கட்டிடங்களும் சரி பார்க்க ஏற்பாடு செய்துள்ளது.
English Summary
tamilnadu 393 ammaunavagam decided