தமிழ்நாடு முழுவதும் கொந்தளிக்கும் பெண்கள்: குஷ்புவை கண்டித்து எகிறும் போராட்டம்.! - Seithipunal
Seithipunal


மகளிர் உரிமை தொகையை பிச்சை என்று கொச்சைபடுத்திய நடிகை குஷ்பூக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. 

குஷ்புவை கண்டித்து காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செய்யாறு, சேலம், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

மகளிர் உரிமை தொகையை கொச்சைப்படுத்திய குஷ்பூ பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பெண்கள் முழக்கமிட்டனர். 

மேலும் அவர்கள், மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என கொச்சைப்படுத்தும் குஷ்பூவுக்கு அடிப்படை பொருளாதாரம் தெரிந்திருக்க வேண்டும். 

இதனை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தில், பா.ஜ.கவை சேர்ந்த குஷ்பூவை கண்டித்து அவரது உருவப்படத்தை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை குஷ்புவுக்கு கார்த்தி சிதம்பரம் எம். பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

அவர், 4 ஆண்டுக்கு ஒரு முறை கட்சி மாறும் பெண்மணி குஷ்பூ. மகளிருக்கு நேரடியாக வழங்கும் மகளிர் உரிமை திட்டம் சிறந்த பொருளாதார உத்தி என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu womens Protests against Khushboo 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->