தமிழக மீனவர்கள் 33 பேர் விடுதலை: ஆனால்... இலங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Tamil Nadu fishermen freed
எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 33 பேர் இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ராமேஸ்வரம், நாகை பகுதியைச் சேர்ந்த 36 மீனவர்கள் கடந்த ஆண்டு மார்ச் 15, 17 ஆம் தேதிகளில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மீது குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 36 பேரில் 33 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 2 மீனவர்களுக்கு 6 மாத கால சிறை தண்டனையும் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Tamil Nadu fishermen freed