விருதுநகர் || படிக்க சொல்லி கண்டித்ததால் ஆத்திரம் - ஆசிரியர் மீது கொடூர தாக்குதல்..! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் திருத்தங்கல் எஸ்.ஆர்.என் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொருளாதார பிரிவு ஆசிரியராக கடற்கரை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேரை நன்றாக படிக்க சொல்லி கண்டித்துள்ளார்.

இதனால், மாணவர்கள் இருவரும் ஆசிரியர் மீது கடுமையான கோபத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் இன்று காலை வழக்கமாக பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த மாணவர்கள் இருவரும் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை தலையில் தாக்கி விட்டு தப்பித்து ஓடி உள்ளனர்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதற்கிடையே போலீசார் இந்த சம்பவத்தின் பேரில் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மாணவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

students attack teacher in viruthunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->