தொடரும் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 22 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


பிழைப்புக்காக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில் பருத்தித்துறை கடற்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி அங்கிருந்த 22 பேரையும் கைது செய்தனர். 

அதுமட்டுமல்லாமல், அவர்கள் வைத்திருந்த இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மற்ற மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியம் மீனவர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sri langan navy arrest twenty two tamilnadu fisher mans


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->