தாய் பாசத்தை மறைத்த கஞ்சா போதை.. தாயை கொலை செய்து வீட்டிலேயே புதைக்க குழி தோண்டிய மகன்..! - Seithipunal
Seithipunal


கஞ்சா போதையில் தாயை அடித்துக் கொன்ற மகன் காவல்துறையினர் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் இவருக்கு மல்லிகா என்ற மனைவியும் இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டதால் இளைய மகன் மட்டும் அவர்களுடன் வசித்து வந்துள்ளார்.

ஆனந்தன் விஷயமாக வெளியூரில் தங்கி விடவே மல்லிகா தனது இரண்டாவது மகன் ஜெயபால் உடன் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயபால் வேலைக்கு செல்லாமல் கஞ்சா எடுத்துக்கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளார்.

இதனை கண்ட அவரது தாய் வேலைக்குச் செல்லாமல் எப்படி குடும்பத்தை காப்பாற்ற போகிறாய்  என கண்டித்துள்ளார்.இதனால் கோபமடைந்த அவர் கஞ்சா போதையில் தனது தாயை கழுத்து அறுத்து கொலை செய்துள்ளார். மேலும் அவரை வீட்டுக்குள்ளேயே புதைப்பதற்கு குழி தோண்டியுள்ளார்.

போதையில் சோர்வடைந்த அவர் அப்படியே தூங்கியுள்ளார். அதிகாலையில் எழுந்து அவர் மீண்டும் பணியை தடவை சத்தம் கேட்டு அவரது அண்ணன் ராமதாஸ் வந்து பார்த்தார். கஞ்சா போதையில் தாயை கொலை செய்துவிட்டு புதைப்பதற்காக குழி தோண்டிய தம்பியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறை உடனடியாக தகவல் அளித்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர் மல்லிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து ஜெயபாலன் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் தாய் மகனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son Kills His Own Mother In Thiruvallur


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->