மதுபோதையில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை.. கொடூர தந்தை மீது பாய்ந்தது போக்சோ..! - Seithipunal
Seithipunal


10 வயது மகளை மதுபோதையில் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூரில் 37 வயது நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 10 வயது மகள் இருக்கிறார். அந்த நபர் மதுவுக்கு அடிமையாகியுள்ளார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவதன்று அவரது மனைவி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். போதையின் உச்சத்தில் அவர் தனது 10 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்தூள்ளார். தனது தாய் வந்ததும் அவரிடம் நடந்தவற்றை அழுது கொண்டே கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மதுபோதையில் பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sexual abuse of an alcoholic daughter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->