செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28 வது முறையாக நீட்டிப்பு.!
Senthil Balaji Court custody extended
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு காணொளி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனை அடுத்து நீதிபதி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை நீட்டித்துள்ளார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Senthil Balaji Court custody extended