செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 34 வது முறையாக நீட்டிப்பு.!
Senthil Balaji Court custody extended
சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை அதிகாரிகள் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகி ஆவணங்களை பெற்றார்.
இதற்கிடையே செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 34 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Senthil Balaji Court custody extended