26வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்.!
Senthil Balaji Court custody extended
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் 26 வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் தடை சட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக துறையினர் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்று முடிவடைந்த நிலையில் சிறையில் இருந்து காணொளி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனை அடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 18ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 26 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Senthil Balaji Court custody extended