மேடையில் ஓ போட சொன்ன செல்லூர் ராஜு.!  - Seithipunal
Seithipunal


மேடையில் ஓ போட சொன்ன செல்லூர் ராஜு.! 

மதுரையில் மண்டேலா நகர் ரிங் ரோடு பகுதியில் இன்று அதிமுக எழுச்சி மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் பங்கெடுத்தனர்.

இந்த மாநாட்டை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் கொடியினை ஏற்றிவைத்து, துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் தொண்டர்களை உற்சாகப்படுத்த ராஜலட்சுமி, செந்திலின் கிராமிய பாட்டு கச்சேரி, நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில், அதிமுக வெற்றிக்குக் காரணம்‘கண் துஞ்சா கழகப்பணியா, மனம் துஞ்சா மக்கள் பணியா’ என்னும் தலைப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து விழா மேடையில் பேசிய செல்லூர் ராஜூ, ‘திமுக எனும் தீய சக்தியை அழிக்க கடவுள் ஆறுமுகசாமி, இந்த பழனிசாமியாக உருவெடுத்து வந்துள்ளார்.  எல்லோரும் இணைந்து ஈபிஎஸ்-க்கு ஒரு ஓ போடலாமா?’ என்று கேட்டுள்ளார். உடனே தொண்டர்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju speach in madurai admk meeting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->