பழநியில் "உலக முருகன் மாநாடு".. குலத்தெய்வத்திற்கு புத்தகம்.. அரசின் அசத்தல் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பழனியில் உலகம் முருகன் மாநாடு வரும் ஜூன் அல்லது ஜூலை மாதம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் "இதுவரை இந்து சமய அறநிலை துறை வரலாற்றில் நடைபெறாத ஒரு நிகழ்வை பழனியில் நடத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது. வரும் ஜூன் அல்லது ஜூலையில் வெகு விமர்சையாக உலக அளவில் இருக்கின்ற தமிழ் கடவுள் ஆன முருகனை வழிபடுகின்ற மற்றும் உலக அளவில் முருகர் கோயிலை பராமரித்து வருகின்ற முருக பக்தர்களை தமிழகத்திற்கு அழைத்து இரண்டு நாட்கள் முருகர் பக்தர்கள் மாநாட்டை நடத்த உயர் மட்ட குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதற்குண்டான பணிகள் தற்போது நடந்து கொண்டு இருப்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். கிராம தெய்வங்கள் எனப்படும் குல தெய்வங்கள் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் வரலாறு புத்தகம் வெளிட முடிவெடுக்கப்பட்டு அதற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது" என அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sekarbabu announced world murugan devotees conference in Palani


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->