மண்ணும், மக்களும் வஞ்சிக்க படுகிறார்கள் - கோபத்தின் உச்சியில் சீமான்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மகேஷ் ஆனந்த் என்பவரை ஆதரித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அப்போது அவர் பேசியதாவது:- "தமிழக அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் தொகை பெறுவதற்காக பொதுமக்களை கையேந்த வைப்பது கொடுமையான ஒன்று. 

இது ஒவ்வொரு தமிழனின் தன்மானத்திற்கும் ஏற்படும் இழப்பு. தரமான கல்வி ஒன்றை மட்டுமே இலவசமாக எதிர்பார்க்கிறோம். தமிழக அரசுக்கு அரசு ஊழியர்களின் மீது ஒருபோதும் அக்கறை இல்லை. 

அரசு ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு காசு இல்லை என கூறும் தமிழக அரசு 150 கோடி ரூபாய் செலவில் சமாதி கட்டுவது என்ன மாதிரியான ஒரு ஏமாற்று வேலை. இந்த மண்ணும் மக்களும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது" என்று கோபத்துடன் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

seeman election campaighn in vellore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->