ஈரோடு : 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை - தீவிர விசாரணையில் போலீசார்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு : 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை - தீவிர விசாரணையில் போலீசார்.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி அருகே காலிங்கராயன் பாளையம் பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் மகள் ஆர்த்தி. இவர் பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஆர்த்தி அதிகளவில் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.
 
இதைக்கவனித்து வந்த பெற்றோர் ஆர்த்தியைக் கண்டித்து அவரிடம் இருந்த செல்போனை பிடுங்கி வைத்துக்கொண்டனர். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த ஆர்த்தி நேற்று முன்தினம் இரவு டியூசனுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். 

அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் ஆர்த்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தம்பி பாட்டிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு பதறி போய் ஓடி வந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஆர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆர்த்தி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி ஆர்த்தியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student sucide in erode


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->