கடையின் பூட்டை உடைத்து கொள்ளை..இருவர் கைது.!!
Robbery breaking shop two persons arrested
காவல்துறையினர் தேர்தல் பணியில் மும்பரமாக இறங்கி உள்ளனர். இதனால், ஆங்காங்கே கொள்ளையர்கள் தனது கைவரிசை காட்டி வருகின்றனர். அந்தவகையில், திருப்பூரை அடுத்த தாராபுரம் ரோட்டில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கடையில் இருந்த 24 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் வந்த கடைக்கு உரிமையாளர் லோகநாதன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தாராபுரம் குற்றவியல் பிரிவு போலீசாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார் லோகநாதன்.
வழக்கு பதிவு செய்த குற்றவியல் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ரஞ்சித் குமார் பழனிச்சாமி என்ற இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 23 ஆயிரம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இக்கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
English Summary
Robbery breaking shop two persons arrested