சாலை விபத்தில் மதுபான கடை ஊழியர் பலி..காவல்துறை விசாரணை.!!
Road accident death police enquiring
புதுச்சேரியில் உள்ள மதுக்கடையில் சப்ளையராக பணிபுரிந்து வருபவர் ஜெயபாலன். நேற்று தனது நண்பரான ஜெயப்பிரகாஷ் உடன் மோட்டார் சைக்கிள் கடலூர் சென்றுள்ளார். பின்னர், புதுச்சேரிக்கு செல்வதற்காக ஜெயபாலுடன் அவரது நண்பர் ஜெயபிரகாசும் இருசக்கர வாகனத்தில் கிளம்பி உள்ளர்.
அப்போது, நிலைதடுமாறிய ஜெயப்பிரகாஷ் மற்றும் ஜெயபாலன் இருவரும் கீழே விழுந்துள்ளனர் அதில் ஜெயபாலனுக்கு தலையில் பலத்த அடிபட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஜெயபிரகாசுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவ்வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தநிலையில், ஜெயபாலன் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Road accident death police enquiring