பொதுமக்களுக்கு அடுத்த அதிர்ச்சி.. தமிழகத்தில் உச்சத்தை தொட்ட அரிசி விலை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரிசி விலை மூட்டைக்கு 450 ரூபாய் வரை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் பெய்து வரும் பருவ மழை காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

தமிழகத்திற்கு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நெல் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது அங்கு பெய்து வரும் கன மழை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் நெல் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் அரிசி விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அரிசி கிலோ 4 ரூபாயிலிருந்து 10 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. அதன்படி, கர்நாடகா பொன்னி அரிசி கிலோ 38 ரூபாயிலிருந்து 55 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. அதேபோல் இட்லி அரிசி 36 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தான் நெல் அறுவடைக்கு வரும் என்பதால் அதுவரை அரிசி விலை குறைய வாய்ப்பில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rice price Hike in tamilnadu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->