வட தமிழக கடலோரப் பகுதிகளில் அதிகனமழை - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
Red alert in North sea sides TamilNadu
வட தமிழக கடலோரப் பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 24 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது. இதனால் வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுச்சேரி கடற்கரை பகுதியில் நாளை அதிகாலை கரையை கடக்கிறது.
English Summary
Red alert in North sea sides TamilNadu