சேலம் அருகே ரேஷன் அரிசி கடத்திய நான்கு பேர் கைது! காவல்துறை அதிரடி நடவடிக்கை.!
Ration rice four person arrested
சேலம் அருகே ரேஷன் அரிசி கடத்திய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெண்ணங்குடி முனியப்பன் கோவில் அருகே பெங்களூரு நோக்கி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் லாரியில் தலா 50 கிலோ எடை கொண்ட 400 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவற்றை பரிமுதல் செய்த காவல்துறையினர், இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Ration rice four person arrested