சென்னையில் துப்பாக்கியுடன் சுற்றிய ராஜஸ்தான் ரவுடிகள்.. வெளியான பகிர் பின்னணி.!!
Rajasthan rowdies arrested for roaming with guns in Chennai
சென்னை பட்டாளம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள், ஐந்து தோட்டாக்களை கைப்பற்றினர்.
இதனை அடுத்து மூன்று பேரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் குஜார், சோனு மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த கசிப் என்பது தெரியவந்தது.
மேலும் ராஜஸ்தானில் இருந்து வந்து எம்.கே.பி நகரில் தங்கியிருக்கும் மணிப்பால் சிங் என்பவர் தனது மகளை காதலித்த இளைஞரை கொலை செய்வதற்காக இவர்களை அனுப்பியது தெரியவந்தது. இதற்காக, மணிப்பால் சிங்கிடம் இருந்து 5 லட்ச ரூபாயை வாங்கிய இளைஞர்கள் பெற்றுள்ளனர். ஆனால் மணிப்பால் சிங் மகளின் காதலனைக் கொலை செய்யாமல் விட்டுள்ளனர்.
இது குறித்து ராஜஸ்தான் ரவுடிகளிடம் மணிப்பால் சிங் கேட்டபோது அவருக்கே கொலை மிரட்டல் விடுத்துள்ளனர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் ரவுடிகள் 3 பேர், மணிப்பால் சிங் மற்றும் அவருக்கு உடைந்தாக இருவர் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Rajasthan rowdies arrested for roaming with guns in Chennai