ராணிப்பேட்டை​ || பள்ளி மாணவிகளுக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர் - பொதுமக்கள் தர்மம் அடி.!  - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை​ || பள்ளி மாணவிகளுக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர் - பொதுமக்கள் தர்மம் அடி.! 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் பகுதியில் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாலை பள்ளி முடிந்து மாணவிகள் வழக்கம் போல் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, இளைஞர் ஒருவர் மாணவிகளை நோக்கி ஆபாச சைகை காட்டியுள்ளார். இதுதொடர்பாக மாணவிகள் பேருந்து நிலையத்தில் நின்ற பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதைகேட்ட பொதுமக்கள் அந்த இளைஞரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிதந்தனர்.

அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அந்த இளைஞர் மேலபுலம் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பது தெரிய வந்தது.

மேலும், டிப்ளமோ படித்துள்ள இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

public peoples attack youth in ranipet


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->