ஒரே சமயத்தில் 2 பள்ளி பேருந்துகள் மீது மோதிய தனியார் பேருந்து! மாணவர்களின் நிலை?
private bus collided same time 2 school buses
சேலம், வாழப்பாடி அருகே முத்தம்பாடியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 2 பேருந்துகள் இன்று காலை வழக்கம் போல் குழந்தைகளை ஏற்றுக் கொண்டு பெரிய கிருஷ்ணாபுரம் அருகே சென்று கொண்டிருந்தது.
ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று, சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை பேருந்துகள் கடக்க முயன்ற போது 2 பள்ளி பேருந்துகள் மீதும் ஒரே சமயத்தில் பலமாக தனியார் பேருந்து மோதியது.
இந்த விபத்தில் 2 பள்ளி பேருந்துகளில் பயணித்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். இதனை பார்த்த அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து சென்று பள்ளி குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் வெளியானதால் பெற்றோர்கள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்றதால் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே சமயத்தில் 2 பள்ளி பேருந்துகள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
private bus collided same time 2 school buses