குடியரசுத் தலைவருடன் திரைப் பிரபலங்கள் திடீர் சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக சென்னைக்கு வந்துள்ளார்.

அதன் படி நேற்று மாலை 6.50 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்த திரவுபதி முர்மு ஆளுநர் மாளிகைக்கு சென்றுள்ளார். அங்கு ஓய்வெடுத்த அவர் இன்று காலை ஒன்பது மணி முதல் 9.30 மணி வரை முக்கிய பிரமுகர்களை ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். 

 

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, நடிகையும் எக்ஸ் எம்.பியுமான வைஜெயந்திமாலா, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மதுவந்தி உள்ளிட்டோர் திரவுபதி முர்முவை இன்று காலை 9 மணிக்கு ராஜ் பவனில் சந்தித்தனர். இவர்களின் இந்த திடீர் சந்திப்பு திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, குடியரசுத் தலைவர் திரவுபதி கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இதை தொடர்ந்து மதியம் விமானப்படையின் தனி விமானம் மூலமாக டெல்லிக்குப் புறப்பட்டு சென்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president draubathi meet cinima celebrities


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->