தமிழகத்தைச் சேர்ந்த காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது! - Seithipunal
Seithipunal


காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்காக குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 காவலர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்படும். இந்த விருது மூன்று பிரிவுகளின் கீழ் அறிவிக்கப்படும். சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான விருது, மெச்சதக்க சேவைகான விருது போன்றவை அறிவிக்கப்படும். 

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் பிரிவில் 3 காவலர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக ஐஜி லலிதா லட்சுமி, கமெண்டண்ட் ராஜசேகர், துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய மூன்று பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் மெச்சத்தக்க சேவைக்கான விருது 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐஜி லோகநாதன், ஐ ஜி செங்கோட்டவன், காவல்துறை ஆய்வாளர் தேவேந்திரன், துணை காவல் ஆய்வாளர் செல்லதுரை, ஐஜி மணி, துணை காவல் ஆய்வாளர் ராஜகோபால், அசிஸ்டன்ட் கமெண்டண்ட் அழகுதுறை. 

மேலும் துணை காவல் ஆய்வாளர் பழனிவேலு, சிறப்பு துணை காவல் ஆய்வாளர் மோகன் பாபு, வெங்கடேசன், துணை காவல் ஆய்வாளர் ராய முத்து உள்ளிட்ட 21 காவலர்களுக்கு மெச்சதக்க சேவை காண விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Award for policemen Tamil Nadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->