தமிழகத்தைச் சேர்ந்த காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது!
President Award for policemen Tamil Nadu
காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்காக குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 காவலர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்படும். இந்த விருது மூன்று பிரிவுகளின் கீழ் அறிவிக்கப்படும். சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான விருது, மெச்சதக்க சேவைகான விருது போன்றவை அறிவிக்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்கள் பிரிவில் 3 காவலர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஐஜி லலிதா லட்சுமி, கமெண்டண்ட் ராஜசேகர், துணை காவல் ஆய்வாளர் ராயப்பன் ஆகிய மூன்று பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மெச்சத்தக்க சேவைக்கான விருது 21 காவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐஜி லோகநாதன், ஐ ஜி செங்கோட்டவன், காவல்துறை ஆய்வாளர் தேவேந்திரன், துணை காவல் ஆய்வாளர் செல்லதுரை, ஐஜி மணி, துணை காவல் ஆய்வாளர் ராஜகோபால், அசிஸ்டன்ட் கமெண்டண்ட் அழகுதுறை.
மேலும் துணை காவல் ஆய்வாளர் பழனிவேலு, சிறப்பு துணை காவல் ஆய்வாளர் மோகன் பாபு, வெங்கடேசன், துணை காவல் ஆய்வாளர் ராய முத்து உள்ளிட்ட 21 காவலர்களுக்கு மெச்சதக்க சேவை காண விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
President Award for policemen Tamil Nadu