மயக்க மருந்து கொடுத்து நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை.!
police case file on sexuall harassment
மயக்க மருந்து கொடுத்து நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை.!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்போரி மடத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் தனது சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காட்டில் உள்ள ஒருவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். அதன் பின்னர் சிவக்குமாரும் தன் சகோதரி வீட்டில் தங்கி படகு கட்டும் வேலை செய்து வந்தார்.
அப்போது சிவகுமாருக்கு தனியார் நர்சிங் ஹோமில் தங்கி படித்து வந்த நர்சிங் மாணவி உடன் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளார். இந்த நிலையில் சிவக்குமாரின் சகோதரிக்கு பிறந்த நாள் வந்துள்ளது. அந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மண்டைக்காடு வரும் படி மாணவியை சிவக்குமார் அழைத்துள்ளார்.
அதன் படி அந்த மாணவியும் சிவகுமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சிவக்குமார் அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து குடிக்கக் தந்துள்ளார். இதை குடித்த அந்த மாணவி சிறிது நேரத்தில் மயக்கமானார்.
இதனைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி கொண்ட சிவக்குமார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர் மயக்கம் தெளிந்த அந்த மாணவி தன் நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அப்போது சிவக்குமார் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்கிறோன் என்று சமாதானப்படுத்தினார்.
ஆனால், இந்த திருமணத்திற்கு சிவக்குமார் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சிவக்குமாரின் தந்தை பால்ராஜ் தரக்குறைவாக பேசியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவி குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி போலீசார் சிவக்குமார் மற்றும் அவரது தந்தை பால்ராஜ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
police case file on sexuall harassment