#சென்னை || பள்ளிகளுக்கு அருகே குட்கா வியாபாரிகளை தட்டி தூக்கிய போலீஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டாலும் ஆங்காங்கே சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் சமூகவிரோதிகள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். அதேபோன்று பள்ளிகளுக்கு அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கிடையே போதை பொருட்கள் புழக்கத்தை தடுக்க மாணவர்களை கண்காணிக்குமாறு ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் தீய பழக்கங்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு மேற்கொண்டு வரும் நிலையில் சென்னையில் பள்ளி அருகே குட்கா பொருட்கள் விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கேகே நகர் பள்ளிகளுக்கு அருகே குட்கா பொருட்களை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செந்தில் முருகன் கனகராஜ் என்ற இரு நபர்களை கைது செய்த கேகே நகர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police arrest Gutka sellers near chennai schools


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->