#பெரம்பலூரில் கொடூரம்.. பொதுக்கழிப்பிடத்துக்கு சிறுவனை கூட்டிச் சென்று அரங்கேற்றிய அதிர்ச்சி செயல்.!
perambalur 14 years boy murdered in public toilet of inthira nagar
14 வயது சிறுவன் ஒருவன் மது புட்டியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிகழ்வு பெரம்பலூரில் அரங்கேறி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கணேசன் என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 14 வயதில் ரோஹித் ராஜ் என்ற மகன் இருந்துள்ளார். ரோகித் ராஜ் தனது நண்பர்களுடன் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சீனிவாசன் என்ற அதே பகுதியை சேர்ந்த இளைஞர் அங்கு வந்து சிறுவன் ரோகித் ராஜை அங்கிருக்கும் பொது கைப்படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின் அவரை குத்தி கொலையும் செய்துள்ளார். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் பேரில் போலீசார் சீனிவாசனின் நண்பர் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் சீனிவாசன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
perambalur 14 years boy murdered in public toilet of inthira nagar