கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற தலைவருக்கு ஏற்பட்ட விபரீதம்.. சோகத்தில் கிராம மக்கள்.! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியம் புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் பழனி. இவர் நேற்று காலை புரட்சி மன்ற அலுவலகத்திலும், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 11 மணியளவில் புறப்பட்டு சென்றபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் அனைவரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் துணைத்தலைவர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Panchayat leader heart attack death in thirupur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->