குன்னூா் அருகே லாரி- அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி கொடூர விபத்து! பயணிகளின் நிலை என்ன?! - Seithipunal
Seithipunal


மேட்டுப்பாளையத்தில் அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது: 

கோவை மாவட்டம்: மேட்டுப்பாளையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தது. 

இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பேருந்தில் ஓட்டுநர் சுரேஷ் மற்றும் நடத்துனர் மனோகரன் என்பவர்கள் பணியில் இருந்தனர். 

ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்றை மணிகண்டன் என்பவா் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் குன்னூா்-பா்லியாறு அருகே பேருந்து சென்றபோது, டிப்பா் லாரியும் அரசு பேருந்தும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. 

இந்த விபத்தில் பேருந்தில் இருந்தவர்களுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. பேருந்தும், லாரியும் மோதிக்கொண்டதால், அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் நின்றுகொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா், அணிவகுத்து நின்ற வாகனங்களை, சுமாா் 1 மணி நேரம் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து, விபத்து குறித்து குன்னூா் போலீசாா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

paliaru road lorry Govt bus collision


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->