பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்த பெயிண்டர் பலி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் புஷ்பராஜ் (45). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு வேலைக்காக வந்துள்ளார். பின்பு அம்பராபாளையம் பகுதியில் உள்ள தனியார் மில்லுக்கு கடந்த இரண்டு மாதங்களாக பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார்.

இதையடுத்து சம்பவத்தன்று வழக்கும் போல் மில்லுக்கு வேலைக்கு சென்ற புஷ்பராஜ் அங்கு 15 அடி உயரத்தில் சிமெண்ட் சீட் மீது நின்று பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென சிமெண்ட் சீட் உடைந்ததால் புஷ்பராஜ் கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த புஷ்பராஜை அப்பகுதியில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் புஷ்பராஜ் வரும் மொழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்த இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொள்ளாச்சி போலீசார் புஷ்பராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Painter died after falling while painting in kovai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->