விமான கழிவறையில் சிக்கிய 1.5 கோடி மதிப்புடைய தங்கக்கட்டிகள்.! - Seithipunal
Seithipunal


சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து காலை 8:20 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வந்தது.

இந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக காலை 10 மணி அளவில் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்துக்கு புறப்பட்டு செல்ல வேண்டி இருந்தது. இதனால், ஊழியர்கள் அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, விமானத்தில் இருந்த கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் பார்சல் ஒன்று இருந்துள்ளது. இதைக் கண்ட ஊழியர்கள் சம்பவம் குறித்து விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். 

உடனே விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து அந்த பார்சலை சோதனையிட்டபோது, அது வெடிகுண்டு அல்ல என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் அந்த பார்சலை வெளியே எடுத்து பிரித்து பார்த்தபோது, அதற்குள் சுமார் ரூ.1.5 கோடி மதிப்பிலான 2.4 கிலோ தங்க கட்டிகள் இருப்பது தெரியவந்தது. 

உடனடியாக அதனை பறிமுதல் செய்துள்ள சுங்கத்துறை அதிகாரிகள், இந்த தங்கத்தை கழிவறை தொட்டிக்குள் போட்டுவிட்டு சென்ற பயணி யார்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one crores worthable gold seized in chennai international airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->