இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த அம்மாசி என்பவரின் மனைவி ரங்கம்மாள்(69). இவர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கரூர் அருகே உள்ள மாயனூர் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனியார் பேருந்தில் சென்று உள்ளனர்.

அப்பொழுது தென்னிலை அருகே உள்ள ஒரு கடையில் டீ குடிப்பதற்காக பேருந்து நிறுத்திய போது, ரங்கம்மாள் உடல் உபாதை கழிப்பதற்காக கரூர்-கோவை சாலையை கடந்து சென்றார்.

அப்பொழுது அவ்வழியாக முதல்வர்பட்டியை சேர்ந்த கந்தசாமி(22) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக திடீரென ரங்கம்மாள் மீது மோதியது.

இதில் ரங்கம்மாள் மற்றும் கந்தசாமி படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் ரங்கம்மாளை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ரங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

மேலும் கந்தசாமி சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தென்னிலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old woman killed in Twowheeler collision


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->