திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை ரயில் நிலையம் அருகே, நேற்று மூதாட்டி ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.

அப்பொழுது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருவள்ளூர் ரயில்வே காவல்துறையினர், உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை என்பதால், இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old woman killed in train collision in tiruvallur near


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->