கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


செம்மஞ்சேரியில் கார் மோதிய விபத்தில் மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

சென்னை செம்மஞ்சேரியை சேர்ந்தவர் கங்கையம்மாள் (85). இவர் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது சாலையை கடக்கும் முயன்றபோது, அவ்வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக திடீரென கங்கையம்மாள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கங்கையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கங்கையம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old woman killed in car collision


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->