குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை எட்டிப் பார்த்த முதியவர் அடித்து கொலை.. 3 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் கேகே புதூர் பகுதியில் 24 வயதான இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது மனைவி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டின் மேல் பகுதியில் ஏறிய முஸ்தாத் அகமது என்ற 60 வயது முதியவர் வீட்டின் ஓடுகளை அகற்றிவிட்டு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை எட்டிப் பார்த்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சுலிட்டார்.

அப்போது அங்கிருந்த உறவினர்கள் முதியவர் முஸ்தாக் அகமதுவை பிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். அதன் பின்னர் உடலில் பலத்த காயத்துடன் அங்கிருந்து சென்ற முதியவர் சாலையோர கால்வாயில் மயங்கி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முதியோரை தாக்கிய கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ராகுல், அவரது அண்ணன் மணிகண்ட மூர்த்தி, இவர்களது நண்பரான மனோஜ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான மூன்று பேரும் இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old man attack and killed in Covai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->