வேலூர் || தாலி மேல சத்தியமா இது ஏன் காசு - கதறி அழுவும் மூதாட்டி.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தொகுதி, மகாதேவமலைக்கு செல்லும் வழியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் நடராஜ் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். அப்போது அந்த வீடு பூட்டி இருந்தது.

இதையடுத்து அதிகாரிகள் பலமுறை கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படாததால், கதவை திறக்க மணிக் கணக்கில் காத்திருந்தனர். பின்னர் போலீசார் மாடி வழியாக சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாடியில் உள்ள ஒரு அறையில் ரூ.2½ லட்சமும், தரைத்தளத்தில் ரூ.4½ லட்சமும் இருந்தது. 

இந்த பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால், ரூ.7 லட்சத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டி மற்றும் முதியவரிடம் விசாரணை நடத்தினர். அதில், முதியவர் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார். 

ஆனால் மூதாட்டி மாடியில் இருந்த பணம் என்னுடையது அல்ல; தரை தளத்தில் இருந்ததே என்னுடைய பணம்; தாலி மேல சத்தியமா என்னோட காசு என்று போலீசாரிடம் ஆவேசமாக கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old lady cry for money seized in vellore


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->