திருவள்ளூரில் நர்சிங் மாணவி தற்கொலை போலீசார் தீவிர விசாரணை.!! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் நர்சிங் மாணவி தற்கொலை போலீசார் தீவிர விசாரணை.!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு அருகே முனிரெட்டி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முனுசாமி - விஜயா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்களும், நந்தினி என்ற மகளும் உள்ளனர்.

இதில் நந்தினி நர்சிங் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இந்த நிலையில் விஜயா நேற்று மகளிடம் வீட்டில் சும்மாதானே இருக்கிறாய் ஏதாவது வேலை செய்யலாமே? என்று கூறியுள்ளார்.

தாய் திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான நந்தினி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த நேரத்தில் நந்தினி பாட்டி கெங்கம்மாள் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது பேத்தி தூக்கில் தொங்கியதை பார்த்து கதறி அழுதுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நந்தினியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இந்த சம்பவம் குறித்து நந்தினியின் தந்தை முனுசாமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் படி போலீசார் விரைந்து வந்து நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் நர்சிங் மாணவி தற்கொலைக்குத் தாய் திட்டியது காரணமா? இல்லை வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nursing student sucide in tiruvallur


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->