ஈரோடு : தனியார் மருத்துவமனையில் செவிலியர் தூக்கு போட்டு தற்கொலை - தீவிர விசாரணையில் போலீசார் .! - Seithipunal
Seithipunal


ஈரோடு : தனியார் மருத்துவமனையில் செவிலியர் தூக்கு போட்டு தற்கொலை - தீவிர விசாரணையில் போலீசார் .!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு மகள் சவுந்தர்யா. இவர் கடந்த இரண்டரை வருடமாக ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். 

இந்த நிலையில் சவுந்தர்யா திடீரென மருத்துவமனை வளாகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் சவுந்தர்யா உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் சவுந்தர்யா தற்கொலை செய்வதற்கு முன்பு யாரிடமோ செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. 

இதற்கிடையே மருத்துவமனைக்கு வந்த சவுந்தர்யாவின் பெற்றோர் மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது அவர்கள் தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nurse sucide in private hospital in erode


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->