என்.எல்.சி சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து விபத்து! 4 பேர் படுகாயம்! - Seithipunal
Seithipunal


நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் லாரி கவிழ்ந்து விபத்தில் 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். 

கடலூர்: நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் 2 -வது சுரங்கத்தில் இரவுப் பணி முடித்து விட்டு இன்று அதிகாலை என்.எல்.சி வாகனத்தின் மூலம் 4  தொழிலாளர்கள் சுரங்கத்திலிருந்து மேலே வந்து கொண்டிருந்தனர்.

நேற்று இரவு பெய்த கனமழையால், சுரங்கத்தில் இருந்து மேலே வரக்கூடிய வழித்தடம் சேரும் சகதியுமாக இருந்தது. இதன் காரணமாக சுரங்கத்தில் உள்ள இருந்து டாப் பெஞ்சில் வாகனம் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சுரங்கத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் வாகனத்தில் உள்ளே இருந்த 4 தொழிலாளர் காயமடைந்து லாரியில் மாட்டி கொண்டு சத்தம் போட்டுள்ளனர். அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த சக தொழிலாளிகள் விரைந்து வந்து அவர்களை மீட்டனர்.

பின்னர் அவசர ஊர்தி மூலம் நெய்வேலி என்.எல்.சி  மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். இதில் கிருஷ்ணமூர்த்தி மற்றும் முகமது என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NLC mine truck overturned accident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->