14 வயது.! 100 உலக சாதனை.! - யார் இந்த சிறுமி?
nineth class student complete 100 world records in nellai
14 வயது.! 100 உலக சாதனை.! - யார் இந்த சிறுமி?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வண்ணார் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன்- தேவிப்பிரியா தம்பதியினர். இவர்களுடைய மகள் பிரிஷா. 9- ம் வகுப்பு படித்து வரும் இவர் 2 வயதில் இருந்தே யோகாசனங்கள் கற்று இதுவரைக்கும் 70 உலக சாதனைகளை படைத்துள்ளார்.
200-க்கும் மேற்பட்ட தங்கப் பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், விருதுகளையும் பெற்றுள்ளார். உலகிலேயே இளம் வயதில் அதிக உலக சாதனைகள், யோகாசனங்கள், நீச்சல் மற்றும் கண்களைக் கட்டிக் கொண்டு பல திறமைகளைச் செய்து சாதனை படைத்துள்ள இவருக்கு குளோபல் யுனிவர்சிட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.
அதுமட்டுமல்லாமல், முதன் முறையாக இளம் வயதிலேயே 3 முனைவர் பட்டங்களை இந்த மாணவிக்கு இளம் வயது யோகா ஆசிரியர் என்ற சான்றிதழை மத்திய அரசு வழங்கி கவுரவித்துள்ளது .
இந்த நிலையில் 70-வது உலக சாதனை செய்துள்ள பிரிஷா தனது 100-வது சாதனையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு கண்களை கட்டிக்கொண்டு 30 நிகழ்வுகளை இன்று செய்து தனது 100-வது உலக சாதனையை நிறைவு செய்துள்ளார்.
அதாவது, பாளையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நோபல் வேர்ல்டு ரெகார்ட் நிறுவனம் முன்பு மாணவ, மாணவிகள் முன்னிலையில் 20 நொடிகளில் கண்களைக் கட்டிக்கொண்டு வாமதேவ ஆசனத்தில் அதிக பொருட்களை அடையாளம் காணுதல், கண்களைக் கட்டிக் கொண்டு திரையில் தெரியும் ஆசனங்களை மிக வேகமாக செய்வது, கண்களைக் கட்டிக் கொண்டு மனித உடலில் கட்டப்பட்டுள்ள பலூன்களை உடைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
மேலும் கண்களைக் கட்டிக்கொண்டு 20 நொடிகளில் 5 மீட்டர் தூரத்தில் காட்டும் சைகைகளை அதிக எண்ணிக்கையில் அடையாளம் காட்டுதல், கண்களைக் கட்டிக் கொண்டு அதிக தூரம் சைக்கிள் ஓட்டுதல், கண்களைக் கட்டிக்கொண்டு ஒரு கையால் சைக்கிள் ஓட்டுதல் மற்றும் கையில் வளையத்தை சுத்திக்கொண்டே சைக்கிள் ஓட்டுதல் உட்பட 30 நிகழ்வுகளைச் செய்து காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.
English Summary
nineth class student complete 100 world records in nellai