திருமணம் செய்துவைக்காத விரக்தியில் 19 வயது வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.!!
nineteen years old boy sucide in kanniyakumari
திருமணம் செய்துவைக்காத விரக்தியில் 19 வயது வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக ரவி குமரி மாவட்டத்தில் உள்ள சாங்கை பகுதியில் வீடு எடுத்து தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர்களுடன் ரவியின் மச்சான் சரவணகுமார் என்பவரும் தங்கி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் தற்காலிக பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், சரவணகுமார் கடந்த சில வாரங்களாகவே தனக்கு பதினெட்டு வயது தாண்டிவிட்டது. ஒப்பந்த அடிப்படையில் வேலையும் பார்க்கிறேன். சம்பளம் வருகிறது. அதனால், எனக்குத் திருமணம் செய்துவையுங்கள் என்று கேட்டு வந்துள்ளார்.
அதற்கு அவரது குடும்பத்தினர் பத்தொன்பது வயதுதானே ஆகிறது. கொஞ்சம் பொறுமையாக இரு என்று கூறி வந்தனர். இருப்பினும், இதைக் கேட்காமல், சரவணகுமார் திருமணம் செய்துவைக்காத விரக்தியில் வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீஸார் விரைந்து வந்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
nineteen years old boy sucide in kanniyakumari