திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகம் முழுவதும் 24 இடங்களில் சோதனை.!
NIA officers raide 24 place for tirupuvanam ramalingam murder case
திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு - தமிழகம் முழுவதும் 24 இடங்களில் சோதனை.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே திருபுவனம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக பிரமுகரான இவர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஒரு அமைப்பினர் மதம் மாற்றம் செய்ததைத் தட்டிக் கேட்டதற்காக மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் இந்த வழக்கில் இதுவரைக்கும் 12 பேரைக் கைது செய்து தேசியப் புலனாய்வு அமைப்பினர் விசாரித்து வருகின்றனர்
இருப்பினும், இந்த வழக்கு தொடர்பாக இன்னும் ஆறு நபர்களைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தேசியப் புலனாய்வு அமைப்பினர் தெரிவித்து தலைமறைவாக உள்ள 6 பேரை பிடிக்க புகைப்படத்துடன் என்ஐஏ தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் குறித்த தகவலை கொடுத்தால் ஒரு நபருக்கு தலா ரூ.1 லட்சம் சன்மானம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தக் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 6 நபர்களுக்கு தொடர்புடைய 24 இடங்களில் அதாவது, தஞ்சை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், நெல்லை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் தேசியப் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தவுள்ளனர்.
English Summary
NIA officers raide 24 place for tirupuvanam ramalingam murder case