தமிழகத்தில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு கனமழை - வானிலை மையம் தகவல்.!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் கடந்த 29-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்து வருகிறது.

ஆனால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை பெய்வதும் நிற்பதுமாகவே இருக்கிறது. அத்துடன் இன்று காற்றழுத்த தாழ்வு மையம் ஒன்று உருவாகவும் உள்ளது. 

இந்நிலையில், அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு சென்னை உள்பட பதினோரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

next two hours heavy rain in tamilnadu 11 districts


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->