6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு "இடியுடன் கூடிய மழை" - வானிலை ஆய்வு மையம்
Next 3 hours thunderstorm rain in 6 districts of tamilnadu
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்படி தமிழகத்தில், கடலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அடுத்த மூணு மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வருகின்ற ஜூலை 1ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை பொருத்தவரை 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
English Summary
Next 3 hours thunderstorm rain in 6 districts of tamilnadu