கோவை அருகே பரபரப்பு.! திருமணமான புதுப்பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி.! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் திருமணமான 13 நாட்களில் புதுப்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் மதுக்கரை முனியப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (29). இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தர்மன் என்பவரது மகள் கிறிஸ்டியான ஏஞ்சல் (25) என்பவருக்கும் கடந்த மூன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து கிறிஸ்டியான ஏஞ்சல் கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் சரியாக சமைக்க தெரியாததாலும், கணவர் வீடு புதிய இடமாக இருந்ததாலும் மனவேதனையில் இருந்துள்ளார். மேலும் கணவரிடம் தனது பெற்றோர் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கிறிஸ்டியான ஏஞ்சல் தனது அண்ணனுக்கு போன் செய்து பேசியுள்ளார். அப்பொழுது அவரும் கிறிஸ்டியான ஏஞ்சலை சமாதானப்படுத்தி அறிவுரை கூறியுள்ளார். இருப்பினும் மனவேதனை இருந்த கிறிஸ்டியான ஏஞ்சல் வீட்டிலிருந்த முன்னணியை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Newly married woman attempts suicide by setting herself on fire kovai


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->