தென்காசி || தாயின் உயிரை எடுத்த மகளின் காதல்.!
near thenkasi daughter love mother sucied
தென்காசி மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் துரைராஜ் என்பவர் சுமார் 20 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது மனைவி தமிழரசி தன் பிள்ளைகளான கிருஷ்ணகுமார், கிருஷ்ணபிரியா, கிருஷ்ணபிரபா ஆகிய மூவருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கிருஷ்ணபிரபா ராஜபாளையம், அழகை நகரிலுள்ள கார்மென்ட்ஸ் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவர், தெற்கு மலையடிப்பட்டியில் உள்ள தங்கமாரியப்பன் என்பவருடன் பழகி வந்திருக்கிறார். இதையறிந்த தாய் தமிழரசி, மகள் கிருஷ்ணபிரபாவை கண்டித்துள்ளார். இருப்பினும், அந்தப் பழக்கத்தை கிருஷ்ணபிரபா கைவிடாமல் தொடர்ந்துள்ளார்.
இதனால், மனம் நொந்து போன தமிழரசி தூக்கு போட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இதையடுத்து, மகன் கிருஷ்ணகுமார் அளித்த தகவலின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல்நிலையத்தில் தற்கொலை வழக்காக பதிவாகியுள்ளது.
English Summary
near thenkasi daughter love mother sucied