மனைவிக்காக மாமனாரை கொலை செய்த கணவர் - போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள தெற்குவாசல் எப்.எப்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் மகள் நாகரத்தினம். இவருக்கும் காஜா தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு வயதில் குழந்தை ஒன்றுள்ளது. 

இவர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நாகரத்தினம் கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இது தொடர்பாக பிரபாகரன் பலமுறை சமரசம் பேசியும் நாகரத்தினம் வர முடியாது என்று தெரிவித்தார். மேலும் நாகரத்தினம் சார்பில் விவாகரத்துக்கு பத்தொய்வு செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, நாகரத்தினத்தின் தந்தை பாலசுப்பிரமணியன் தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைப்பதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதையறிந்த பிரபாகரன் பாலசுப்பிரமணியனிடம் தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை பாலசுப்பிரமணியன் வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தப்போது பிரபாகரன் உள்பட  நான்கு பேர் அரிவாளால் அவரைத் தாக்கியுள்ளனர். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், "நானும், எனது மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். 

சில கருத்து வேறுபாடு காரணமாக தன்னை பிரிந்து சென்ற மனைவியை என்னுடன் சேர்த்து வைக்காமல் அவருடைய தந்தை மறுமணம் செய்து வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

அவரிடம் பலமுறை சமரசம் பேசியும் எங்களை பிரித்து வைப்பதிலேயே அவர் ஆர்வம் காட்டினார். இதனால் மாமனாரை கொலை செய்தேன் என்று பிரபாகரன் போலீசில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near madurai son in law kill father in law for wife


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->