அரசு பள்ளி என்றால் சாபக்கேடா?. கண்ணீர் விட்டு புலம்பிய தலைமையாசிரியர்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தை அடுத்து சாலமரத்துப்பட்டி ஊராட்சியை சேர்ந்த ஓலைப்பட்டி எனும் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், அந்த ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தக் கிராமசபை கூட்டத்தில் ஓலைப்பட்டி நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை கலந்து கொண்டு பேசியதில், 

''பள்ளியில் உள்ள இரண்டு கட்டிடங்களில் ஒரு கட்டிடத்தில் தான் மீட்டர் பெட்டி உள்ளது. அதனால், இன்னொரு கட்டிடத்திற்கு 50 மீட்டர் தூரத்திற்கு வயர் கனெக்ஷன் கொடுக்க வேண்டும். அவ்வாறு, வயர் கனெக்ஷன் கொடுத்தாலும் ஆறு மாதம் முதல் ஒரு வருடத்திற்கு கூட தாங்குவது கிடையாது. குரங்கு பிச்சுப் போட்டுவிடுகிறது அல்லது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுகிறது. 

இவ்வாறு தொடர்ந்து வயர் டேமேஜ் ஆனால் கட்டிடத்தில் எர்த் அடிக்கிறது. இதில் பசங்களுக்கு ஏதாவது ஆச்சு என்றால் யார் பதில் சொல்வார்கள். இது தொடர்பாக பிடிஓ ஆபிசுக்கு சென்று கடிதம் கொடுத்தேன். அதற்கு பிடிஓ,'இதற்கு 25,000 ரூபாய் செலவாகும். இதெல்லாம் செய்ய முடியாதும்மா. நீங்க எடுத்துட்டு போயிட்டு ஏதாவது வருமானம் வந்துச்சுன்னா பார்த்து செஞ்சுக்கோங்க' என்று தெரிவித்தார்.

நாங்கள் என்ன கமிஷனா வாங்குறோம். அதிகாரிகளிடம் முறையிட்டால் கிராம சபை கூட்டத்தில் மனு கொடுக்க சொல்கிறார்கள். ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

சேதமடைந்த பள்ளி சுற்றுசுவரை ஜேசிபி வைத்து இடிக்க முடியாது மேனுவலாகதான் இடிக்க முடியும் என்று சொன்னார்கள். அந்த இடம் புல், புதர்கள், முள்ளு செடிகளாக இருக்கிறது. அந்த வழியாக பாம்பு ஜன்னலில் ஏறி வருகிறது. எங்களுக்கு நல்ல சுற்று சுவர் கட்டி தர வேண்டும் என்று கடிதம் கொடுத்தேன். அதுவும் செய்யவில்லை.

நான் இந்த பள்ளிக்கு வந்த உடனே கட்டிடம் அழுக்காக இருக்கிறது, என்பதற்காக ஐம்பதாயிரம் என் கை காசு செலவு செய்த செய்து கலர் செய்தேன். இப்பொழுது ஒரு பில்டிங்கிற்கு கமிஷனர் அம்மா பெயிண்ட் பண்ணி கொடுத்தாங்க. அதுவும் ஒரு கோட் தான் அடிப்போம் இரண்டு கோட் எலிஜிபிள் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். 

அப்போ அரசுப்பள்ளி சுகாதாரமாக இருக்கக் கூடாதா? நீட்டாவே இருக்கக் கூடாதா? அரசு பள்ளி என்றால் சாபக்கேடா. ஒவ்வொருத்தர்கிட்டயும் கெஞ்சிகிட்டு இருப்பதை விட பேசாமல் விஆர்எஸ் கொடுத்துட்டு போயிடலாம்'' என்று கண்ணீர் விட்டு தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near krishnagiri grama shaba meeting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->